/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாய், மகனுக்கு மிரட்டல் தொழிலாளி மீது வழக்கு
/
தாய், மகனுக்கு மிரட்டல் தொழிலாளி மீது வழக்கு
ADDED : நவ 22, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த பிள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மங்கையர்க்கரசி, 55; விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் மனோஜ்குமார், 32; இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், மங்கையர்க்கரசி மற்றம் அவரது மகன் இருவரும், கடந்த, 14ல் வீட்டில் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த மனோஜ்குமார், இட பிரச்னை காரணமாக தகாத வார்த்தையில் திட்டி, இருவரையும் கொலை செய்து விடுவேன் என, மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து, மங்கையர்க்கரசி கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார் மனோஜ்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

