/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்பான நிலையில் மரவள்ளி
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்பான நிலையில் மரவள்ளி
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்பான நிலையில் மரவள்ளி
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்பான நிலையில் மரவள்ளி
ADDED : நவ 15, 2024 02:08 AM
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில்
செழிப்பான நிலையில் மரவள்ளி
கிருஷ்ணராயபுரம், நவ. 15-
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், மரவள்ளிக்கிழங்கு செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, உடையந்தோட்டம், பிள்ளபாளையம், சிவாயம், குழந்தைப்பட்டி, மலையாண்டிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
கடந்த மாதம் முதல், இந்த பகுதியில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கிழங்கு செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது. சில மாதங்களில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்யப்படும் என, விவசாயிகள் கூறினர்.