/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் திரியும் கால்நடைகள் வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
/
சாலையில் திரியும் கால்நடைகள் வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
சாலையில் திரியும் கால்நடைகள் வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
சாலையில் திரியும் கால்நடைகள் வாகன ஓட்டுனர்கள் தவிப்பு
ADDED : ஏப் 26, 2024 04:09 AM
கரூர்: சாலையில் கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர் மாநகராட்சி பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருபவர்களில், சிலர் அவற்றை தங்களது வீடுகளில் கட்டி வளர்க்காமல் சாலையில் திரிய விடுகின்றனர். கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், ஆடுகள் திடீரென வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். தவிர, சாலைகளில் திரியும் ஆடுகள், இப்பகுதியில் பூ, பழம், காய்கறி கடைகளுக்கு சென்று அவற்றை தின்பதால் வியாபாரிகளும் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர்.
எனவே, கால்நடைகளை சாலையில் திரிய விடும் உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

