sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆனங்கூர் வழியாக குறைந்த வேகத்தில் இயக்கிய 3 ரயில்களில் செயின் பறிப்பு

/

ஆனங்கூர் வழியாக குறைந்த வேகத்தில் இயக்கிய 3 ரயில்களில் செயின் பறிப்பு

ஆனங்கூர் வழியாக குறைந்த வேகத்தில் இயக்கிய 3 ரயில்களில் செயின் பறிப்பு

ஆனங்கூர் வழியாக குறைந்த வேகத்தில் இயக்கிய 3 ரயில்களில் செயின் பறிப்பு


ADDED : ஜூன் 19, 2024 06:40 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம் : ஆனங்கூர் வழியாக குறைந்த வேகத்தில் இயக்கிய, மூன்று ரயில்களில் பயணித்த பெண் பயணிகளிடம் இருந்து, மர்ம நபர்கள் செயினை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, ஈரோடு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, ஆனங்கூர் பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதனால், ஆனங்கூர் பகுதி யில் குறைவான வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வேகத்தை பயன்படுத்தி, கடந்த, 14 இரவு, குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில், ஜன்னல் ஓரத்தில் பயணித்த மணிமேகலை, 35, என்ற பெண்ணிடம், அவர் அணிந்திருந்த, ஐந்து கிராம் தங்க செயினை, மர்ம நபர் பறித்துள்ளார். அதே நாளில், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த கல்யாணி, 52, சேரன் எக்ஸ்பிரஸில் பயணித்த ஜெயசித்ரா, 37, ஆகிய இரண்டு பெண்களிடம், தலா ஒன்றரை பவுன் செயினை, மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். இந்த, மூன்று சம்பவமும் ஆனங்கூர் ரயில்பாதை வழியாக மெதுவாக செல்லும் போது, அந்த வாய்ப்பை பயன்படுத்தி காட்டுப்பகுதியில் அதிகாலை, 3:00 முதல் 4:00 மணிக்குள் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதனால் பெண் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இதுகுறித்து, ஈரோடு, கோவை ரயில்வே போலீசில், பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளித்துள்ளனர். அந்த புகார்படி, மொபைல் போன் சிக்னல் மற்றும் அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us