sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.3.52 கோடி மதிப்பில் நுாலக கட்டடம் காணொளியில் முதல்வர் திறந்து வைப்பு

/

ரூ.3.52 கோடி மதிப்பில் நுாலக கட்டடம் காணொளியில் முதல்வர் திறந்து வைப்பு

ரூ.3.52 கோடி மதிப்பில் நுாலக கட்டடம் காணொளியில் முதல்வர் திறந்து வைப்பு

ரூ.3.52 கோடி மதிப்பில் நுாலக கட்டடம் காணொளியில் முதல்வர் திறந்து வைப்பு


ADDED : செப் 28, 2025 08:39 AM

Google News

ADDED : செப் 28, 2025 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: சென்னையிலிருந்து, முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக கரூர் மாவட்டத்தில், 3.52 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நுாலக கட்டடங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, கரூர் வெண்ணைமலையில் ஊர்ப்புற நுாலகம் புதிய கட்டட திறப்பு விழாவில் கலெக்டர் தங்கவேல் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது:

கரூர் மாவட்டம், பவித்திரத்தில், 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடத்தில் கிளை நுாலகம், வெள்ளியணையில், 22 லட்சம் மதிப்பில் கிளை நுாலகம், அரங்கநாதன்பேட்டையில், 22 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டடத்தில், ஊர்ப்புற நுாலகம், க.பரமத்தியில், 22 லட்சம் மதிப்பீட்டிலான இணைப்பு கட்டடத்தில், ஊர்ப்புற நுாலகம், கீழகுட்டப்பட்டியில், 22 லட்சம் மதிப்பீட்டிலான புதிய கட்டடத்தில், ஊர்ப்புற நுாலகம், வெண்ணைமலையில், 22 லட்சம் ரூபாயில் ஊர்ப்புற நுாலக புதிய கட்டடம் என மொத்தம், 3.52 கோடி ரூபாய் மதிப்பில் நுாலக கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, விஜயலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us