ADDED : நவ 21, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், சிவாயம் பஞ்சாயத்து பகுதியில், மழைநீர் செல்லும் வாரி வழித்தடங்களில், பஞ்சாயத்து 100 நாள் திட்ட தொழிலாளர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்., இரும்பூதிப்பட்டி பகுதியில், மழை நீர் வடிந்து செல்லும் வாரி உள்ளது. இதன் வழித்தடம் முழுவதும் முள் புதர்களால் மண்டி உள்ளது. இதனால் மழை காலங்களில் மழைநீர் வடிந்து செல்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பஞ்சாயத்து சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்்ளை கொண்டு, வாரி வழித்தடங்களில் வளர்ந்த முள் செடிகளை அகற்றும் பணி நடந்தது.

