/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.19.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
/
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.19.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.19.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.19.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
ADDED : அக் 15, 2024 07:20 AM
கரூர்: சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 19.39 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.
கரூர், க.பரமத்தி பகுதி விவசாயிகள் தேங்காய்களை உடைத்து, காய வைத்து தங்களது தேவைக்கு எண் ணெய் எடுத்தது போக மீதமுள்ள பருப்பு, தேங்காய்களை, நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்துக்கு கொண்டு செல்கின்றனர். நேற்று நடந்த ஏலத்தில், 3,605 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 32.88 ரூபாய், அதிகபட்சமாக, 37.89 ரூபாய், சராசரியாக, 36.45 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,113 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 40 ஆயிரத்து, 961 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய், 331 மூட்டைகள் வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 123.99 ரூபாய், அதிகபட்சமாக, 133.99 ரூபாய், சராசரியாக, 132.99 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 92.17 ரூபாய், அதிகபட்சமாக, 125.49 ரூபாய், சராசரியாக, 119.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தமாக, 16,105 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 18 லட்சத்து, 98 ஆயிரத்து, 600 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தேங்காய், கொப்பரை தேங்காய் சேர்த்து, 19 லட்சத்து, 39 ஆயிரத்து, 561 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.