sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எழுத்தாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

/

எழுத்தாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

எழுத்தாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

எழுத்தாளர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு


ADDED : நவ 03, 2025 03:22 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், எழுத்தாளர் உதவித்-தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் தங்கவேல் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் எழுத்தாளர்களின், இலக்கிய படைப்புகளில், 11 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர், மதம் மாறிய ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த, 9 எழுத்தாளர்கள் மற்றும் இந்த சமூக பிரச்னை எழுதும் இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்கள், தலா, ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை பெற விண்ணப்பிக்-கலாம். எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை.

கதை, கட்டுரை, கவிதை, வரலாறு மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும் இருக்கலாம். இருப்பினும் தமிழ்மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும். பிற மொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ் மொழி படைப்பாகவும் இருக்-கலாம். படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்டுள்ள படைப்புகளை கொண்டு விண்ணப்பித்தல் கூடாது. https://www.tn.gov.in/form_view.php?dep_id=MQ என்ற இணையத-ளத்தளத்தில் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்து கொள்-ளலாம். வரும், 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us