sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.8.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கல்

/

ரூ.8.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கல்

ரூ.8.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கல்

ரூ.8.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கல்


ADDED : நவ 03, 2025 03:22 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதி திருகாம்புலியூரில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் மனு அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்-கவேல் தலைமை வகித்தார். கரூர் எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, நலத்திட்ட உதவிகளை

வழங்கினார்.

வருவாய்த்துறை சார்பில், 1,137 பயனாளிகளுக்கு, இலவச வீட்டு-மனை பட்டாக்களும், கூட்டுறவுத்துறை சார்பில், 41 பயனாளிக-ளுக்கு, 35.66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயிர் கடனுதவி-களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நான்கு பயனா-ளிகளுக்கு, 68,000 மதிப்பீட்டிலான இயற்கை மரண உதவித்தொ-கைகளையும், மகளிர் திட்டம் சார்பில், 12 பேருக்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கடனுதவிகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பில், 38 பேருக்கு, ரேஷன் அட்டை என மொத்தம், 2,640 பேருக்கு, 8.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, டி.ஆர்.ஓ., கண்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

* இதேபோல், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்-ளியில், நேற்று காலை, 11:00 மணிக்கு, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நலத்திட்ட உதவி வழங்க நிகழ்ச்சி நடந்தது.

எம்.எல்.ஏ., மாணிக்கம், டி.ஆர்.ஓ., கண்ணன், சப்-கலெக்டர் சுவாதிஸ்ரீ, தாசில்தார் இந்துமதி, ஒன்றிய செயலாளர்கள் தியாக-ராஜன், சந்திரன், நகராட்சி தலைவர் சகுந்தலா ஆகியோர் முன்-னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, 692 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தோகைம-லையில், 500 பயனாளிகள், கடவூர் ஒன்றியம், மைலம்பட்டியில், 525 பயனாளிகள், என, மொத்தம், 2,217 பயனாளிகளுக்கு பல்-வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தோகைமலை முன்னாள் யூனியன் குழு தலைவர் சுகந்தி சசி-குமார், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் கவுன்சிலர் சின்னையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us