/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.150க்கு விற்பனை
/
கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.150க்கு விற்பனை
ADDED : நவ 03, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கள்-ளப்பள்ளி, சிந்தலவாடி, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.
இதில், ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ரக வாழைகள் பயிரிடப்ப-டுகிறது.வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதில், பூவன் வாழைத்தார் ஒன்று, 250 ரூபாய்; கற்பூரவள்ளி வாழைத்தார், 150 ரூபாய்; ரஸ்தாளி வாழைத்தார், 300 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

