/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் குறைந்த மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
/
கரூர் மாவட்டத்தில் குறைந்த மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
கரூர் மாவட்டத்தில் குறைந்த மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
கரூர் மாவட்டத்தில் குறைந்த மழை குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
ADDED : ஆக 30, 2025 01:44 AM
கரூர், '' கரூர் மாவட்டத்தில், இயல்பான மழையளவை விட, நடப்பு ஆகஸ்ட் வரை, 22.53 மி.மீ., மழை குறைவாக பெய்துள்ளது,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட விவசாயி கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பிறகு, கலெக்டர் தங்க வேல் பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 2,741 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக, 150 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறுதானிய விதைகள், 26 மெட்ரிக் டன், எண்ணை வித்துக்கள், ஐந்து மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தில், இயல்பான ஆண்டு மழையளவு, 652.20 மி.மீ., நடப்பு ஆகஸ்ட் வரை, 209.07 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் வரை, இயல்பான அளவை விட, 22.53 மி.மீ., மழை குறைவாக பெய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், டி.ஆர்.ஓ.,க்கள் கண்ணன், விமல்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் உமா, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, ஆர்.டி.ஓ., முகமது பைசல் உள்பட அரசு துறை அதிகாரி கள் பங்கேற்றனர்.
முன்னதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து, 99 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.