/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சிக்குள் வரும் லாரிகளால் நெரிசல்
/
அரவக்குறிச்சிக்குள் வரும் லாரிகளால் நெரிசல்
ADDED : டிச 08, 2024 01:58 AM
அரவக்குறிச்சி, டிச. 8-
அரவக்குறிச்சியில் அரசு, தனியார் அலுவலகங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, லாரிகள், பஸ்கள் என, அனைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.
மேலும், கரூர் சாலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டு வருவதால், ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. லாரிகள் இந்த ஒருவழி சாலையை பயன்படுத்துவதால் முன்பு இருந்ததை விட, தற்போது அரவக்குறிச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசாரும் இல்லை. காலை, மாலையில் பள்ளி, கல்லுாரி வாகனங்களும் சேர்ந்து கொள்வதால் அதிகப்படியான நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரிகள் அனைத்தும், புறவழிச் சாலையில் சென்று வர ஏற்பாடு செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.