sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி விறுவிறு

/

நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி விறுவிறு

நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி விறுவிறு

நெரூர்-உன்னியூர் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி விறுவிறு


ADDED : மே 03, 2024 07:17 AM

Google News

ADDED : மே 03, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : நெரூர்- உன்னியூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி விறு விறுப்பாக நடத்து வருகிறது.

காவிரி ஆற்றின் மேற்கு கரையில் கரூர் மாவட்டம் நெரூர், கிழக்கு கரையில் திருச்சி மாவட்டம் உன்னியூர் உள்ளது. காட்டுப்புத்தூர், தொட்டியம், முசிறி போன்ற பகுதிகளில் நெரூர் செல்ல வேண்டும் என்றால், கரூர் அல்லது மோகனுார் வழியாக செல்ல வேண்டும். இதனால், 15 முதல், 20 கி.மீ.,வரை சுற்றி செல்ல வேண்டியுள்ளது. நெரூர் - உன்னியூர் இடையே காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதன்படி, 101.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணி விறு, விறுப்பாக நடந்து வருகிறது.

இது குறித்து, மாநில நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் கூறியதாவது: இந்த உயர்மட்ட பாலம் 1,100 மீட்டர் நீளம், 26 துாண்களுடன் அமைக்கப்படும்.மேலும், இணைப்பு சாலையுடன் சேர்ந்த பாலம், 2,245 மீட்டர் நீளம் கொண்டது. பாலத்தின் மொத்த அகலம், 12.90 மீட்டர், வண்டி வழி, 10.50 மீட்டர் இருக்கும். இருபுறமும் நடைபாதைகள் இருக்கும். உன்னியூர் பக்கத்தில் உள்ள அணுகு சாலையின் ஒரு பகுதியாக கால்வாயின் குறுக்கே சிறு பாலமும் கட்டப்படும். கடந்த பிப்., தொடங்கப்பட்ட பாலம் கட்டுமான பணி மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டால் நெரூர், உன்னியூர் பகுதி மட்டுமல்லாது, கரூரிலிருந்து சென்னை செல்வோருக்கும் மிகுந்த வசதியாக இருப்பதுடன், பயண நேரமும் வெகுவாக குறையும். மேலும், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில், இருந்து நெரூரிலுள்ள ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் கோவிலுக்கு வந்து செல்ல வசதியாக அமையும்.இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us