sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம்: போலீசார் விசாரணை

/

கரூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம்: போலீசார் விசாரணை

கரூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம்: போலீசார் விசாரணை

கரூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம்: போலீசார் விசாரணை


ADDED : ஜன 18, 2025 02:33 AM

Google News

ADDED : ஜன 18, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் இருந்து, கரூர் வழியாக நேற்று காலை, 11:45 மணிக்கு, நாகர்கோவில் எக்ஸ் பிரஸ் ரயில், தான்தோன்றிமலை - வெள்ளியணை இடையே சென்று கொண்டிருந்தது.

அப்போது, தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே, ரயில் இஞ்ஜின் முன்பக்கத்தில் சத்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சிய-டைந்த ரயில் டிரைவர், ரயிலை வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி விட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே சென்று ஆய்வு செய்-தனர். அப்போது, ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில், சிறிது சேதம் அடைந்திருப்பது தெரிய வந்தது.

பிறகு, தண்டவாளத்தின் மேல்பகுதி சரி செய்யப்பட்டது. வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்ட, எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்று இஞ்ஜின் இணைக்கப்பட்டு, நேற்று மதியம், 1:00 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தான்தோன்றிமலை-வெள்ளியணை இடையே தண்டவா-ளத்தில், ஏற்பட்ட சிறு சேதம் உடனடியாக சரி செய்யப்பட்டது. இதனால், பயணிகளுக்கு பாதிப்பு இல்லை. அந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தண்டவாளத்தில் இரும்பு துண்டு, கம்பி வைத்தால், இது போன்ற சேதம் ஏற்-படும்.

வழக்கமாக சிறுவர்கள், ரயில்வே தண்டவாளங்களில் சில்லரை காசு, இரும்பு துண்டுகளை வைத்து விளையாடுவது வழக்கம். தொடர் விடுமுறை காரணமாக, சிறுவர்கள் வைத்த இரும்பு துண்-டுகளால், தண்டவாளம் சேதம் அடைந்ததா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என, தீவிரமாக விசாரித்து வரு-கிறோம்.

இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us