/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம்: போலீசார் விசாரணை
/
கரூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம்: போலீசார் விசாரணை
கரூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம்: போலீசார் விசாரணை
கரூர் ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம்: போலீசார் விசாரணை
ADDED : ஜன 18, 2025 02:33 AM
கரூர்: கரூர் அருகே, ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில் சேதம் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் இருந்து, கரூர் வழியாக நேற்று காலை, 11:45 மணிக்கு, நாகர்கோவில் எக்ஸ் பிரஸ் ரயில், தான்தோன்றிமலை - வெள்ளியணை இடையே சென்று கொண்டிருந்தது.
அப்போது, தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே, ரயில் இஞ்ஜின் முன்பக்கத்தில் சத்தம் கேட்டது. இதனால், அதிர்ச்சிய-டைந்த ரயில் டிரைவர், ரயிலை வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி விட்டு, கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் தான்தோன்றிமலை ரயில்வே கேட் அருகே சென்று ஆய்வு செய்-தனர். அப்போது, ரயில்வே தண்டவாளத்தின் மேல் பகுதியில், சிறிது சேதம் அடைந்திருப்பது தெரிய வந்தது.
பிறகு, தண்டவாளத்தின் மேல்பகுதி சரி செய்யப்பட்டது. வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்ட, எக்ஸ்பிரஸ் ரயிலில் மாற்று இஞ்ஜின் இணைக்கப்பட்டு, நேற்று மதியம், 1:00 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்டது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தான்தோன்றிமலை-வெள்ளியணை இடையே தண்டவா-ளத்தில், ஏற்பட்ட சிறு சேதம் உடனடியாக சரி செய்யப்பட்டது. இதனால், பயணிகளுக்கு பாதிப்பு இல்லை. அந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தண்டவாளத்தில் இரும்பு துண்டு, கம்பி வைத்தால், இது போன்ற சேதம் ஏற்-படும்.
வழக்கமாக சிறுவர்கள், ரயில்வே தண்டவாளங்களில் சில்லரை காசு, இரும்பு துண்டுகளை வைத்து விளையாடுவது வழக்கம். தொடர் விடுமுறை காரணமாக, சிறுவர்கள் வைத்த இரும்பு துண்-டுகளால், தண்டவாளம் சேதம் அடைந்ததா அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா என, தீவிரமாக விசாரித்து வரு-கிறோம்.
இவ்வாறு தெரிவித்தனர்.