/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தந்தை துக்க நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த மகள் பலி
/
தந்தை துக்க நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த மகள் பலி
ADDED : மார் 31, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த சரவணபிரபு மகள் மஞ்சு லட்சுமி, 35; இவரது தந்தை கடந்த, 28ல், கரூர் வஞ்சி-யம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டில் இறந்துவிட்டார்.
அப்போது, துக்க நிகழ்ச்சிக்கு வந்த மஞ்சுலட்சுமி அழுதபடியே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள், மஞ்சு லட்சுமியை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் மஞ்சு லட்சுமி உயிரிழந்தார். மஞ்சு லட்சுமியின் கணவர் சரவணபிரபு, 37, கொடுத்த புகார்படி, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.