ADDED : நவ 06, 2024 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, நவ. 6-
குளித்தலை அடுத்த, முத்துரங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி, 43, விவசாய கூலி தொழிலாளி.
இவரது, 14 வயது மகள் நேற்று முன்தினம் மதியம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டுக்கு வந்தன. அவர் வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார் படி, மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.