ADDED : நவ 05, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த நச்சலுார் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ், ராசாத்தி, 49, தம்பதியர். விவசாயக் கூலி தொழிலாளி. இவர்களது மகள் சரோஜினி, 19. கடந்த, 1ம் தேதி இரவு அனைவரும் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 3:00 மணியளவில் பார்த்தபோது, சரோஜினியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

