/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 05, 2024 12:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், தலைவர் கந்தசாமி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மருத்துவ முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு மருத்துவ முகாம்களில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் இலவசமாக எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் காளிதாஸ், பொருளாளர் தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர்.

