/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்
/
அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்
அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்
அ.தி.மு.க., சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : டிச 23, 2025 05:28 AM

கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், பொது மக்க-ளுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்-தது.
கரூர் மாநகராட்சி, 47வது வார்டுக்குட்பட்ட முத்து கவுண்டன்புதுார், கரட்டுப்பாளையம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2011-21 வரை, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை, மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பொதுமக்க-ளிடம் வழங்கினார்.மேலும், வீடு வீடாக சென்று வரும், 2026ம் ஆண்-டுக்கான காலண்டர்களை வழங்கிய, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் சட்டசபை தேர்-தலில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய பொது-மக்களிடம் கேட்டு கொண்டார். அப்போது, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் ஏகாம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

