/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்ட அளவிலான கைப்பந்து மலர் மெட்ரிக் மாணவி சிறப்பிடம்
/
மாவட்ட அளவிலான கைப்பந்து மலர் மெட்ரிக் மாணவி சிறப்பிடம்
மாவட்ட அளவிலான கைப்பந்து மலர் மெட்ரிக் மாணவி சிறப்பிடம்
மாவட்ட அளவிலான கைப்பந்து மலர் மெட்ரிக் மாணவி சிறப்பிடம்
ADDED : நவ 07, 2024 05:48 AM
கரூர்: மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில், மலர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனர்.
கரூர் தான்தோன்றிமலை, மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டிகள் நடந்தது. இதில், 18 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில். மாவட்ட அளவில் இப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பிடித்தனர். இவர்களுக்கு பள்ளியின் தாளாளர் பேங்க் சுப்ரமணியன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல், வளர்மதி, தமிழ் ஆசிரியை அழகம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.