/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை: வெறிச்சோடிய சாலைகள்
/
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை: வெறிச்சோடிய சாலைகள்
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை: வெறிச்சோடிய சாலைகள்
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை: வெறிச்சோடிய சாலைகள்
ADDED : நவ 02, 2024 12:55 AM
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்
விடுமுறை: வெறிச்சோடிய சாலைகள்
கரூர், நவ. 2-
தீபாவளி பண்டிகையையொட்டி, கரூரில் வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம், தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த, 30ல் அரை நாளும், நாளை வரை, நான்கரை நாட்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கரூரில் ஜவுளி நிறுவனங்கள், கொசு வலை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பஸ் பாடி கட்டும் நிறுவனங்களுக்கும் நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், நேற்று கரூர் நகரில் பெரும்பாலான ஓட்டல்கள், ஜவுளி கடைகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதனால், கரூர் நகரில் நேற்று காலை கோவை சாலை, திருச்சி சாலை மற்றும் ஜவஹர் பஜார்
பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆனால் வங்கிகள், எல்.ஐ.சி., நிறுவனம், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், வருமான வரித்துறை அலுவலகம் உள்ளிட்ட, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன.