/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தமிழக கவர்னரை கண்டித்து கரூரில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
தமிழக கவர்னரை கண்டித்து கரூரில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தமிழக கவர்னரை கண்டித்து கரூரில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
தமிழக கவர்னரை கண்டித்து கரூரில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2025 06:45 AM
கரூர்: தமிழக கவர்னர் ரவியை கண்டித்து, கரூரில் தி.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர் ஜவகர்பஜாரில் உள்ள தலைமை தபால் நிலையம் முன், தி.மு.க., சார்பில், சட்டசபையை கவர்னர் ரவி அவமதித்ததாக கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகராட்சி மேயர் கவிதா தலைமை வகித்தார். தமிழகத்தில் அத்துமீறும் கவர்னரையும், அவரை காப்பாற்றும், அ.தி.மு.க., -- பா.ஜ., கள்ள கூட்டணியை கண்டித்தும், 500க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் கண்டன கோஷம் எழுப்பினர். மாநில அரசை மதிக்காத, கவர்னர் ரவியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சி துணை மேயர் தரணி சரவணன், மண்டல தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா, மாநகராட்சி பகுதி செயலாளர் கணேசன், குமார், ஜோதிபாசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சரவணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.