/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாளையத்திலிருந்து செல்லும் பஸ்கள் அரவக்குறிச்சி நிறுத்தத்தில் நிறுத்தப்படுமா?
/
பாளையத்திலிருந்து செல்லும் பஸ்கள் அரவக்குறிச்சி நிறுத்தத்தில் நிறுத்தப்படுமா?
பாளையத்திலிருந்து செல்லும் பஸ்கள் அரவக்குறிச்சி நிறுத்தத்தில் நிறுத்தப்படுமா?
பாளையத்திலிருந்து செல்லும் பஸ்கள் அரவக்குறிச்சி நிறுத்தத்தில் நிறுத்தப்படுமா?
ADDED : நவ 20, 2024 01:52 AM
பாளையத்திலிருந்து செல்லும் பஸ்கள்
அரவக்குறிச்சி நிறுத்தத்தில் நிறுத்தப்படுமா?
அரவக்குறிச்சி, நவ. 20-
பாளையத்திலிருந்து செல்லும் பஸ்கள், அரவக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவக்குறிச்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்து, பள்ளிக்கு வருகின்றனர். பாளையத்தில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் வழியில், ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இங்கிருந்து அரவக்குறிச்சிக்கு மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வந்து செல்கின்றனர். காலை, 8:00 மணிக்கு முன் அரசு பஸ்கள் இயக்கப்படாததால், தனியார் பஸ்களிலேயே பெரும்பாலான மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள் செல்கின்றனர். தனியார் பஸ் அரவக்குறிச்சியில் உள்ள, புங்கம்பாடி வளைவு பகுதியிலேயே இறக்கி விட்டு செல்கின்றனர். இங்கிருந்து பள்ளிக்கு செல்ல, ஒரு கிலோ மீட்டருக்கு மேல் தொலைவு உள்ளதால், நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, அரவக்குறிச்சி பஸ் நிறுத்தம் வரை பஸ் சென்று வந்தால் பள்ளிக்கு அருகிலேயே மாணவ மாணவியரை இறக்கி விட்டு செல்லலாம். எனவே, பாளையத்திலிருந்து காலை, மாலை நேரங்களில் இயக்கப்படும் அரசு, தனியார் பஸ்களை, பஸ் நிறுத்தம் வரை இயக்க வேண்டும் என பயணிகள், மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.