/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீரால் ஓட்டுனர்கள் அவதி
/
கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீரால் ஓட்டுனர்கள் அவதி
கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீரால் ஓட்டுனர்கள் அவதி
கோவை சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீரால் ஓட்டுனர்கள் அவதி
ADDED : மார் 09, 2024 12:45 AM
கரூர், கரூர் அருகே, சாலையில் கழிவு நீர் நேற்று காலை ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.
கரூர்-கோவை சாலை திருகாம்புலியூர் பிரிவில், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல், அலட்சியமாக உள்ளது.
இந்நிலையில், பல நாட்களாக திருகாம்புலியூர் பிரிவில், சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி, சேலம் சாலையில் ஆறாக ஓடி வருகிறது. துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது
அவசியம்.

