/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
/
மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2024 06:38 AM
கரூர்: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, கரூர் கிளை சார்பில், திட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், மின்வாரிய மேற்-பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அதில், மாநில மின் வாரியங்களை தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், மின் வாரியத்தில், 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தமிழக அரசு அர-சாணை எண், 6,7 மற்றும் 32 திரும்ப பெற வேண்டும், தி.மு.க., அரசு கடந்த, 2021ல் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறை-வேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்-டது.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் கோபால கிருஷ்ணன், மாநில செயலாளர் தனபால், திட்ட செயலாளர் நெடு-மாறன், பொருளாளர் ஈஸ்வரன், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் ஜீவானந்தம் உள்பட மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்றனர்.

