/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஈசநத்தம் சாலையில் மின்விளக்கு தேவை
/
ஈசநத்தம் சாலையில் மின்விளக்கு தேவை
ADDED : பிப் 06, 2026 04:42 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் இருந்து, ஈசநத்தம் செல்லும் சாலையில் போதிய மின் விளக்குகள் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அரவக்குறிச்சியில்
இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் அதிக-ளவு காடுகள் நிறைந்துள்ளன.
இதனால் இந்த சாலையில், ஆங்-காங்கே குறிப்பிட்ட துாரம் வரை மின் வசதி
இல்லாமல், மிக குறைவான அளவில் மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்
காரணமாக, இரவு நேரங்களில் சாலை விபத்து நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக
உள்ளது. எனவே விபத்துகளை கட்-டுப்படுத்தும் வகையில்,
அரவக்குறிச்சியில் இருந்து ஈசநத்தம் செல்லும் சாலையில் கூடுதல் மின்
விளக்குகளை ஏற்படுத்தி தர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி, சாலையை பார்வையிட்டு
மின் விளக்குகள் அமைப்பதற்கான ஏற்-பாடுகளை, விரைந்து மேற்கொள்ள வேண்டும் என
வாகன ஓட்-டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

