/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின் மோட்டார்களை பகலில் இயக்க வேண்டும்: மின் வாரியம் கோரிக்கை
/
மின் மோட்டார்களை பகலில் இயக்க வேண்டும்: மின் வாரியம் கோரிக்கை
மின் மோட்டார்களை பகலில் இயக்க வேண்டும்: மின் வாரியம் கோரிக்கை
மின் மோட்டார்களை பகலில் இயக்க வேண்டும்: மின் வாரியம் கோரிக்கை
ADDED : அக் 13, 2025 02:18 AM
கரூர்: 'விவசாயிகள் மின் மோட்டார்களை, பகல் நேரத்தில் இயக்க முன்-வர வேண்டும்' என, கரூர் மின் பகிர்மான வட்ட மின் வாரிய செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு மாநிலம் முழுவதும், விவசாய பணிகளுக்கு என, பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதை பயன்படுத்தி, விவசாய பணிகளில் லட்சக்கணக்கான விவ-சாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய பணிக்கு அதிகாலை வேளையிலும், மாலை, இரவு நேரங்களில் மின் மோட்டாரை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த நேரத்தில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கான பொது பயன்பாட்டுக்கு, மின்-சாரம் அதிகளவில் எடுக்கப்படுகிறது.
இதனால், மின் தேவை அதிகரிக்கும் நேரமாக அதிகாலை, இரவு நேரம் உள்ளது. இதை கணக்கீட்டு, மின்வாரியம் சூரிய ஒளி மின்-சாரத்தை அதிகளவு பயன்படுத்தும் வகையில், பகல் நேரத்தில் விவசாய பணிக்களுக்கான மின் மோட்டார்களை விவசாயிகள் இயக்க வேண்டும். சூரிய ஒளி மின்சாரத்தை அதிகளவு பயன்ப-டுத்துவதன் மூலமாக, பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்க முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.