/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அழிந்துவரும் பனை மரங்கள்: காப்பாற்ற நடவடிக்கை தேவை
/
அழிந்துவரும் பனை மரங்கள்: காப்பாற்ற நடவடிக்கை தேவை
அழிந்துவரும் பனை மரங்கள்: காப்பாற்ற நடவடிக்கை தேவை
அழிந்துவரும் பனை மரங்கள்: காப்பாற்ற நடவடிக்கை தேவை
ADDED : மே 13, 2024 07:29 AM
கரூர் : அழிந்து வரும் பனை மரங்களை காப்பாற்ற, கதர் நல வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பனைமரங்கள் இருந்தன. இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் பனை மரங்களை விவசாயிகள் வளர்த்து வந்தனர். பனை மரங்களின் ஓலை கால்நடைகளுக்கு தீவனமாகவும், வீடு கட்டவும் பயன்படுத்தி வந்தனர். மேலும் பனை பொருட்களான நொங்கு, பதநீர், பனங்கருப்பட்டி, பனை கல்கண்டு, பனங்கிழங்கு போன்றவைகளால் பயனடைந்து வந்தனர். பனை ஓலைகளில் இருந்து விசிறி, பெட்டி பாய், மெத்தை போன்றவை தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.
நாகரிக மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், பனை பொருள்களுக்கு வரவேற்பில்லை. இதனால் விவசாயிகள் பனை மரங்களை செங்கல் சூளை, உணவு விடுதிகள் ஆகியவற்றுக்கு விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால், பனை மரங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
லட்சக் கணக்கில் இருந்த பனை மரங்கள், தற்போது ஆயிரக்கணக்கில் வந்த விட்டன. எனவே, கதர் நல வாரியம், பனை மரம் வளர்ப்பதற்கு விவசாயிகளை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.