sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பைக் மீது லாரி மோதி இன்ஜி., மாணவர் பலி

/

பைக் மீது லாரி மோதி இன்ஜி., மாணவர் பலி

பைக் மீது லாரி மோதி இன்ஜி., மாணவர் பலி

பைக் மீது லாரி மோதி இன்ஜி., மாணவர் பலி


ADDED : ஜூன் 25, 2025 02:32 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, சென்னை தனியார் கல்லுாரியில், மரைன் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்துவந்த, ஆறு மாணவர்கள், கடந்த, 20ல், மூன்று டூவீலர்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர். செல்லும் வழியில், கரூரில் உள்ள மாணவன் சந்தோஷ் வீட்டில் ஓய்வெடுத்துவிட்டு, மறுநாள் காலை புறப்பட்டனர். அங்கு, இரண்டு நாட்கள் சுற்றுலாவை முடித்துக்கொண்டு, நேற்று மதியம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக கடலுார் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை சாமியார்பேட்டை தெருவை சேர்ந்த மீனவர் காத்தவராயன் மகன் மணியரசன், 20, என்பவர் மட்டும் தனியாக, 'பல்சர்' டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, மருதுார் சோதனைச்சாவடி அருகே பின்னால் வந்த லாரி மோதியது. இதில், மணியரசன் படுகாயமடைந்தார். அவரை, சக நண்பர்கள் மீட்டு குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மணியரசன் இறந்தார். விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us