/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 21, 22ல் கட்டுரை, பேச்சு போட்டி
/
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 21, 22ல் கட்டுரை, பேச்சு போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 21, 22ல் கட்டுரை, பேச்சு போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு 21, 22ல் கட்டுரை, பேச்சு போட்டி
ADDED : ஜன 13, 2025 03:08 AM
கரூர்: 'பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி, வரும், 21, 22ல் நடத்தப்படும்' என, கலெக்டர் தங்கவேல் தெரி-வித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2, கல்லுாரி படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மாவட்ட அளவிலான கவிதை, கட்-டுரை, பேச்சு போட்டி, வரும், 21, 22 ஆகிய நாட்களில், காலை, 9:30 மணிக்கு, தான்தோன்றிமலை அரசு கலை கல்லுா-ரியில் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலி-ருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் ஒரு போட்-டிக்கு, ஒரு மாணவர் வீதம், மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து, 3 மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். போட்டிக்-கான தலைப்புகள், முன்னதாகவே தெரிவிக்கப்படமாட்டாது. போட்டி நடைபெறும் நாளன்று அறிவிக்கப்படும். இப்போட்டி-களில் மாவட்ட அளவில் முதல் பரிசு, 10,000 ரூபாய்-; இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய்;- மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய்- வழங்கப்படும். இதில், வெற்றி பெறுபவர்கள் மாநில அளவி-லான போட்டியில் கலந்துகொள்ளலாம்.மாணவ, மாணவியர் அந்தந்த கல்லுாரி முதல்வரின் அனுமதி-யுடன் கல்லுாரி கல்வி இணை இயக்குனர், மாவட்ட முதன்மைக்-கல்வி அலுவலர் அனுமதியுடன் பங்கேற்க வேண்டும். விபரங்க-ளுக்கு, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலக தொலை-பேசி எண்-, 04324-255077ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.