/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு
/
முதல்வர் மருந்தகம் அமைக்க கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : நவ 30, 2024 01:05 AM
முதல்வர் மருந்தகம் அமைக்க
கால அவகாசம் நீட்டிப்பு
கரூர், நவ. 30-
கரூர் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, வரும் டிச., 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின், இணைப்பதிவாளர் கந்தராஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, இன்று (30 ம்தேதி) கடைசி நாள் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க வரும் டிச., 5 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ள, பி.பார்ம்., டி.பார்ம் சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையத முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.