ADDED : நவ 26, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை,குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., கல்லுப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பரமசிவம், 65. இவர் நேற்று மதியம் 12:30 மணியளவில் அவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள, வயல் பகுதியில் மாடுகளுக்கு தீவன புல் அறுக்க சென்றார்.
அப்போது அவரை விஷ பாம்பு தீண்டியுள்ளது. இதை தொடர்ந்து அவர் வீட்டுக்கு வந்த நிலையில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

