sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

/

மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்

மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம்


ADDED : நவ 28, 2025 01:21 AM

Google News

ADDED : நவ 28, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூரில், மரவள்ளி கிழங்கு சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்டவைக்கு அடுத்தபடியாக, மரவள்ளி கிழங்கு அதிகளவில் நடவு செய்யப்படுவது வழக்கம். தற்போது, 2,807 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

மரவள்ளி கிழங்கு நடவு செய்வது என்பது கரும்பு, வாழை உள்ளிட்டவற்றிற்கு செய்யும் செலவை காட்டிலும் கூலி ஆட்கள் செலவு குறைவு. நெல், கரும்பு உள்ளிட்டவற்றிக்கு தண்ணீர் தேவை அதிகம். ஆனால் மரவள்ளி கிழங்கிற்கு தண்ணீர் தேவை குறைவு என்பதால், கிணற்று நீர் பாசன மூலம் சாகுபடி நடந்து

வருகிறது.

மரவள்ளி கிழங்கு விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மழை காலம் என்பதால் செழிப்பாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் ஓரளவு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதனால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us