sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

/

தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

தேங்காய் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : அக் 10, 2024 01:51 AM

Google News

ADDED : அக் 10, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேங்காய் விலை உயர்வு

விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம், அக். 10-

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், தேங்காய் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், கட்டளை, வீரராக்கியம், திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம், சிந்தலவாடி, லாலாப்பேட்டை, வல்லம், கொம்பாடிப்பட்டி, புதுப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் தேங்காய் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக, தேங்காய் வரத்து காரணமாக விலை உயராமல் இருந்தது. தற்போது வரத்து சரிவு மற்றும் விழா கால பண்டிகை துவங்குவதால், தேங்காய் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மாதம் சிறிய தேங்காய் ஒன்று, எட்டு ரூபாய்க்கு விற்றது. தற்போது விலை உயர்ந்து தேங்காய் ஒன்று, 15 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெரிய தேங்காய் ஒன்று, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us