/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பனிப்பொழிவால் விலை போகாத எலுமிச்சை கோடையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
/
பனிப்பொழிவால் விலை போகாத எலுமிச்சை கோடையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
பனிப்பொழிவால் விலை போகாத எலுமிச்சை கோடையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
பனிப்பொழிவால் விலை போகாத எலுமிச்சை கோடையை எதிர்பார்க்கும் விவசாயிகள்
ADDED : டிச 16, 2024 03:40 AM
கரூர்: கடும் பனிப்பொழிவால், எலுமிச்சை பழத்துக்கு விலை குறைந்-துள்ளது. இதனால், கோடையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்தி-ருக்கின்றனர்.
கரூர் மாவட்டத்தில், எலுமிச்சை பழம் விளைச்சல் அதிகளவில் இல்லை. இதனால், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, அய்யம்-பாளையம் பட்டி, வீரன்பட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் பீஜப்பூர், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, கரூர் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை, 4,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விற்றது.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெய்த மழை காரணமாக, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை, 3,000 ரூபாய் முதல், 3,200 ரூபாய் வரை மட்டும் விற்பனையாகி-றது.இதுகுறித்து, எலுமிச்சை வியாபாரிகள் கூறியதாவது: கடந்த, இரண்டு மாத காலமாக கடும் பனிப்பொழிவு உள்ளது. இதனால், உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் எலுமிச்சை பழத்துக்கு தேவை குறைந்து விட்டது. இதனால், விலையும் பல மடங்கு குறைந்துள்ளது. அடுத்த மாதம் கோடைகாலம் துவங்க உள்-ளதால், எலுமிச்சை பழத்துக்கு தேவை அதிகரிக்கும். அப்போது, விலை உயர
வாய்ப்புண்டு.இவ்வாறு அவர்கள் கூறினர்.

