sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தனியார் சிமென்ட் நிறுவன கட்டுமான பணி நிறுத்தக்கோரி விவசாயிகள் சங்கம் மனு

/

தனியார் சிமென்ட் நிறுவன கட்டுமான பணி நிறுத்தக்கோரி விவசாயிகள் சங்கம் மனு

தனியார் சிமென்ட் நிறுவன கட்டுமான பணி நிறுத்தக்கோரி விவசாயிகள் சங்கம் மனு

தனியார் சிமென்ட் நிறுவன கட்டுமான பணி நிறுத்தக்கோரி விவசாயிகள் சங்கம் மனு


ADDED : டிச 30, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 30, 2025 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: 'தனியார் சிமென்ட் நிறுவன கட்டுமான பணியை நிறுத்த வேண்டும்' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலர் ராஜா, கரூர் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.

அதில், கூறியிருப்பதாவது:க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குப்பட்ட தென்னிலை மேல்பாகம் பகுதி, வானம் பார்த்த பூமியாக உள்ளதால் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். தற்போது கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, அவ்வப்போது பெய்யும் மழையில் கால்நடை தீவனங்களை பயிரிட்டு வருகின்றனர். இங்கு, பல கல்குவாரிகள் செயல்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வசிக்க இயலாத பகுதியாக மாறி வருகிறது.

இந்நிலையில், தென்னிலை மேல்பாகத்தில், புதிய சிமென்ட் நிறுவனம் தொடங்க கட்டட பணிகள் நடக்கிறது. இங்கு, கட்டுமான பணிகள் மேற்கொள்ள கூடாது என, பல முறை மனு அளிக்கப்பட்டது. இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தனியார் சிமென்ட் நிறுவனத்தின் கட்டட பணிகள் முழு வீச்சில் நடக்கிறது. இங்கு, சிமென்ட் ஆலை தொடங்கினால், காற்று, தண்ணீர் போன்றவைகள் மாசு ஏற்பட்டு கால்நடைவளர்ப்பு, விவசாயம் பாதிக்கப்படும். எனவே, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக கட்டுமான பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us