/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரும் 24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
வரும் 24ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : அக் 15, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 24ல் நடக்கிறது என, கலெக்டர் தங்க
வேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும், 24 காலை, 11:00 மணிக்கு மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த விவசாயி
கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்று, தங்களது குறைகளை நேரிலும் மனுக்களாக கொடுத்தும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.