sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தென்கரை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜூலை 01, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மாயனுார் கதவணையில் இருந்து, குறுவை சாகுபடிக்காக, தென்கரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்டா பாசன பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, கடைமடை பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு, தண்ணீர் கடந்த வாரம் சென்றது.

இதனால், கிளை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கரூர், திருச்சி மாவட்டங்களில், முக்கியமான, 17 கிளை வாய்க்கால்களில், படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையில் இருந்து தென்கரை வாய்க்காலில், முதல் கட்டமாக வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தென்கரை வாய்க்கால் பாசன பகுதியில், மகிழ்ச்சியுடன் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாயனுார் கதவணைக்கு வினாடிக்கு, 31 ஆயிரத்து, 169 கன அடி தண்ணீர் வந்தது.

குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 30 ஆயிரத்து, 349 கன அடியும், கீழ் கட்டளை வாய்க்காலில், 300 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.95 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us