/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
/
மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டம் விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஏப் 27, 2025 04:21 AM
கரூர்: மத்திய அரசின் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் விண்ணப்பிக்-கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்-தப்பட்டு வருகிறது. இதில், காய்கறி மற்றும் அனைத்து தோட்டக்-கலை பயிர்களுக்கும் சிறு விவசாயிகள், 5 ஏக்கர் வரை, குறு விவ-சாயிகள், 2.50 ஏக்கர் வரை, 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன அமைப்புகளை தங்கள் நிலங்களில் அமைத்துக்கொள்-ளலாம். இதர விவசாயிகள், 75 சதவீத மானியத்தில், 12.5 ஏக்கர் வரை இத்திட்டத்தில் பயன்பெறலாம். சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து, 7 ஆண்டு நிறைவுற்று இருந்தால் புதிதாக மீண்டும் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம். சேதம் அடைந்-துள்ள உபகரணங்கள் (பக்கவாட்டு குழாய்) மட்டும் மானியத்தில் பெற்று சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து கொள்ளலாம். தெளிப்பு நீர் பாசனம் அமைத்து மூன்று ஆண்டு நிறைவு பெற்றிருந்தால், சொட்டு நீர் பாசனமாக மாற்றி கொள்ளலாம்.
கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடப்-பாண்டில், 1,500 ஹெக்டேர் பரப்பில் 10.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு, ஆதார் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், அடங்கல், கூட்டு வரை-படம், கணினி சிட்டா, மறு ஆய்வு தீர்வு பதிவேடு, நிலவரை-படம், சிறு, குறு விவசாயிகளாக வருவாய்துறை சான்று ஆகியவற்-றுடன், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி அல்லது https://tnhorticulture.tn.gov.in என்ற இணையத-ளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கூறியுள்ளார்.