sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு சாயக்கழிவு கலந்த நீரால் விவசாயிகள் கவலை

/

நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு சாயக்கழிவு கலந்த நீரால் விவசாயிகள் கவலை

நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு சாயக்கழிவு கலந்த நீரால் விவசாயிகள் கவலை

நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு சாயக்கழிவு கலந்த நீரால் விவசாயிகள் கவலை


ADDED : அக் 25, 2024 01:05 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

சாயக்கழிவு கலந்த நீரால் விவசாயிகள் கவலை

கரூர், அக். 25-

நொய்யல் ஆற்றில் நீர்

வரத்து அதிகரித்த நிலையில், சாயக்கழிவு கலந்த தண்ணீர் வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் பெய்யும் மழையால், உருவாகும் நொய்யல் ஆறு திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஓடி காவிரியாற்றில் கலக்கிறது. பல ஆண்டுகளாக, திருப்பூர் மாவட்டங்களில் செயல்படும் சாயப்பட்டறை கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பதாக, விவசாயிகள் புகார் தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால், நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு வருவது நின்றபாடில்லை. திருப்பூர் மாவட்டங்களில் மழை காரணமாக, நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. அதில், மீண்டும் சாயக்கழிவு கலந்த தண்ணீர் நிறம் மாறி வருவதாக கரூர் மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

வடகிழக்கு பருவ மழையால், நொய்யல் ஆற்றில் சில நாட்களாக தண்ணீர் வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பலன் இல்லை. சாயக்கழிவுகளை, சாயப்பட்டறைகளில் இருந்து சட்ட விரோதமாக கலக்கின்றனர். அதை மாசு கட்டுப்பாடு, பொதுப்பணி, வருவாய் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சாயக்கழிவு கலந்த தண்ணீர், கரூர் மாவட்டத்தில் நொய்யலில் இருந்து காவிரியாற்றில் கலக்கிறது. 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக, காவிரி நீர் தான் உள்ளது.

நொய்யல் ஆற்றின் சாயக்

கழிவு நீர் கலப்பதால், டெல்டா மாவட்ட விவசாயமும் பாதிக்கப்படுகிறது. அதை தவிர, சென்னை மாவட்ட குடிநீர் தேவைக்கும், வீராணம் ஏரி வாயிலாக காவிரி நீர் செல்கிறது. காவிரியாற்றில் மணல் இருந்தால், சாயக்கழிவை சுத்திகரிக்க வழி ஏற்படும். தற்போது, காவிரியாற்றில் அதிகளவில் மணலும் இல்லை. டெல்டா பாசன மாவட்டங்களில், குறுவை சாகுபடி பணி தொடங்க உள்ளது. நொய்யல் ஆற்றில் சாய கழிவை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us