/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மயில்களை தடுக்க நெற்பயிர்களுக்கு துணி கட்டிய விவசாயிகள்: கரூரில் நூதன முயற்சி
/
மயில்களை தடுக்க நெற்பயிர்களுக்கு துணி கட்டிய விவசாயிகள்: கரூரில் நூதன முயற்சி
மயில்களை தடுக்க நெற்பயிர்களுக்கு துணி கட்டிய விவசாயிகள்: கரூரில் நூதன முயற்சி
மயில்களை தடுக்க நெற்பயிர்களுக்கு துணி கட்டிய விவசாயிகள்: கரூரில் நூதன முயற்சி
ADDED : ஜன 13, 2024 04:18 AM
கரூர்: மயில்களிடம் இருந்து, நெற் பயிர்களை காக்க துணிகளை வயல்களில், விவசாயிகள் கட்டி நுாதன முயற்சியில் கரூர் விவசாயிகள் ஈடுப ட்டுள்ளனர்.கடந்த ஜூன் மாதம், 12 ல் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை பாசனத்துக்காக தண்ணீர் காவிரியாற் றில் திறக்கப்பட்டது.
மேலும், கேரளா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக அமராவதி ஆறு அணை, பவானிசாகர், நொய்யல் ஆறுகளில் உபரி நீர் சென்றது. இதனால், காவிரியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.கரூர் மாவட்டத்தில், காவிரி மற்றும் அமராவதி ஆற்றுப்பகுதியின் பாசன நிலங்களில், நெல், வாழை, மஞ்சள் மற்றும் கரும்பு ஆகியவை அதிகளில் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், தேசிய பறவையான மயில்களின் எண்ணிக்கை, கரூர் மாவட்டத் தில் அதிகம் உள்ளதால், பயிர்கள் சேதம் அடைவதாக விவசாயிகள் புகார் கூறினர். இதனால், மயில்களை விரட்ட வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனைபடி, சில நுாதன முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், மயில்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. உணவுக்காக, பயிர்களை மயில்கள் சேதப்படுத்தியது. ஆனால், விவசாயிகளால் மயில்களை கட்டு படுத்த முடியவில்லை.இந்நிலையில், வனத்துறை அதிகாரிகள் மயில்களை கட்டுபடுத்த பழைய வீடியோ டேப், பிளாஸ்டிக் டேப் மற்றும் சி.டி., க்களை வயல்களில் கட்டி தொங்க விடுமாறு அறிவுரை வழங்கினர். வீடியோ டேப்பும், 'சி.டி'யும் காற்றில் ஆடும் தன்மை கொண்ட தால், ஆட்கள் இருப்பதாக கருதி மயில்கள் பயிர் பக்கம் செல்லாது. ஆனால், தற்போது அவை கிடைப்பதில்லை.நெல் அதிகளவில் சாகுபடி செய்ய ப்பட்டுள்ளதால், மயில்கள் செல்லாத வகை யில், வயல்களை சுற்றி துணிகளை கட்டி உள்ளோம். மயில்கள், விவசாய நிலத்தின் நடு பகுதிக்கு செல்லாது. வரப்பு பகுதியில், துணி கட்டியிருப்பதால், ஒரளவுக்கு நெற் பயிர்களை பாதுகாக்க முடிகிறது.இவ்வாறு தெரிவித்தனர்.