ADDED : ஜன 04, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, ஜன. 4-
குளித்தலை அடுத்த, துாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, 60, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பவித்ரா, 21, நேற்று முன்தினம் மதியம், 2:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார் படி பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.