/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்
/
ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்
ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்
ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத மின் விளக்குகளால் அச்சம்
ADDED : ஏப் 01, 2024 04:00 AM
கரூர்: வெள்ளியணை அருகே, ரயில்வே குகை வழிப்பாதையில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து
வருகின்றனர்.
கரூர் - திண்டுக்கல் ரயில்வே இருப்பு பாதையின் கீழ், வெள்ளியணை அருகே சின்னம நாயக்கன்பட்டி பிரிவில் இருந்து, கத்தளாப்பட்டி புதுார் சாலையில், குகை வழிப்பாதை உள்ளது. அதன் வழியாக, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று
வருகின்றனர்.
குறிப்பாக, செல்லிப்பாளையம், கத்தாளப்பட்டி, கொங்குநகர், புதுார், சின்னதம்பிபாளையம் உள்ளிட்ட, பகுதிகளை சேர்ந்தவர்கள், ரயில்வே குகை வழிப்பாதை வழியாக டூவீலர் மற்றும் கார்களில் செல்கின்றனர். இந்நிலையில், ரயில்வே குகை வழிப்பாதையில், அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான மின் விளக்குகள் எரியாமல் சேதமடைந்துள்ளது.
இதனால், அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் வழிப்பறி அச்சத்தில் பயணித்து வருகின்றனர். மேலும், குகை வழிப்பாதையை சுற்றியுள்ள காலி இடங்களில், சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். சில சமயங்களில், வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது.
எனவே, ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத மின்விளக்குகளை எரிய வைக்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள்
எதிர்பார்க்கின்றனர்.

