/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
ADDED : டிச 16, 2024 03:44 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.
இந்த கதவணையில் சேமிக்கப்-படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள், பரிசலில் சென்று மீன்களை பிடித்து, கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது, காவிரி ஆற்றில் நீர்வரத்து காரணமாக மீன்கள் வரத்து குறைந்தது. இதனால், ஜிலேபி மீன் கிலோ, 150 ரூபாய், கெண்டை, 110 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது. மீன்கள் வாங்க கரூர், புலியூர், சேங்கல், உப்பிடமங்-களம், கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் அதிகம் வந்திருந்தனர். நேற்று மட்டும், 200 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டது

