/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
ADDED : ஜன 13, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் சேமிக்கப்-படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், லாலாப்-பேட்டை, பஞ்சப்பட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள், மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். மொத்தம், 350 கிலோ மீன்கள் விற்பனையாகின.