/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்
மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்
மாயனுார் கதவணை பகுதியில் மீன்கள் விற்பனை மும்முரம்
ADDED : டிச 30, 2024 02:12 AM
கிருஷ்ணராயபுரம்: மாயனுார் கதவணை அருகில், நேற்று மீன்கள் விற்பனை தீவிர-மாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. இங்கு மீன்கள் வளர்க்கப்படுகிறது. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
நேற்று நடந்த விற்பனையில் ஜிலேப்பி மீன்கள் கிலோ, 150 ரூபாய், கெண்டை மீன்கள், 100 ரூபாய், விரால் மீன்கள், 650 ரூபாய்க்கு விற்கப்பட்டது. மீன்கள் வாங்க கரூர், புலியூர், சேங்கல், மணவாசி, கருப்பூர், திருக்காம்புலியூர், லாலாப்-பேட்டை, மகாதானபுரம் பகுதிகளில் இருந்து மக்கள் வந்திருந்-தனர். நேற்று, 350 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்-டது.

