/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மந்தம்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மந்தம்
ADDED : நவ 25, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்,: மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்-ளது. இந்த கதவணையில் சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்-கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் மீன் பிடித்து கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது சபரிமலை சீசனால் மீன் விற்பனை மந்தமாக காணப்பட்டது.
நேற்று, ஜிலேபி மீன் கிலோ, 120 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது. கரூர், புலியூர், கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மீன்களை வாங்கி சென்றனர். நேற்று, 300 கிலோ வரை விற்பனை செய்யப்பட்டது.