/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
ADDED : அக் 07, 2024 03:42 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் நடுவே, கதவணை கட்டப்பட்டுள்ளது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. வளர்க்கப்படும் மீன்களை உள்ளூர் மீன-வர்கள் பரிசலில் சென்று பிடித்து, கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
தற்போது, ஆற்றில் ஜிலேபி மீன்கள் வரத்து அதிகம் உள்ளது. இதனை மீனவர்கள் பிடித்து வந்து ஒரு கிலோ, 150 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்-றனர். மேலும், கெண்டை மீன் கிலோ, 100 ரூபாய், ஊசி மீன், 80 ரூபாய் என்ற விலையில் விற்கப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், மாயனுார், மணவாசி, திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் பகு-தியை சேர்ந்த மக்கள் மீன்களை வாங்கி
சென்றனர்.