/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
/
மாயனுார் கதவணையில் மீன் விற்பனை மும்முரம்
ADDED : ஜன 06, 2025 01:44 AM
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது. சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. வளர்க்கப்படும் மீன்களை, உள்ளூர் மீனவர்கள் பரி-சலில் சென்று பிடித்து வந்து கதவணை அருகே செல்லும் கட்-டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்து வருகின்-றனர்.
காவிரி ஆற்றில், தற்போது ஜிலேபி, கெண்டை மீன்கள் வரத்து அதிகம் உள்ளன. இந்த மீன்கள் பிடிக்கப்பட்டு மக்களுக்கு விற்-பனை செய்யப்படுகிறது. ஜிலேபி மீன் கிலோ, 140 ரூபாய், கெண்டை மீன் கிலோ, 100 ரூபாய், விரால் மீன் கிலோ, 600 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று, 500 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. கரூர், புலியூர், சேங்கல், மணவாசி, மாயனுார், பஞ்சப்பட்டி, திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் மீன்களை வாங்கிச்சென்றனர்.