/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வளர்பிறை சுப முகூர்த்தம் கரூரில் பூக்கள் விலை உயர்வு
/
வளர்பிறை சுப முகூர்த்தம் கரூரில் பூக்கள் விலை உயர்வு
வளர்பிறை சுப முகூர்த்தம் கரூரில் பூக்கள் விலை உயர்வு
வளர்பிறை சுப முகூர்த்தம் கரூரில் பூக்கள் விலை உயர்வு
ADDED : பிப் 02, 2025 01:10 AM
வளர்பிறை சுப முகூர்த்தம் கரூரில் பூக்கள் விலை உயர்வு
கரூர் : வளர்பிறை சுப முகூர்த்தம் காரணமாக, கரூரில் ஒரு கிலோ மல்லிகை பூ, 3,000 ரூபாய் வரை விற்பனையானது.
தை மாதம் தொடங்கிய நிலையில், இன்று வளர்பிறை சுப முகூர்த்த நாளாகும். இதனால், திருமணம், வீடு கிரக பிரவேசம் உள்ளிட்ட, பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இன்று நடக்கிறது. இதையடுத்து, நேற்று கரூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள, பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் பூக்களை வாங்க குவிந்தனர். அப்போது, கிலோ மல்லிகை பூ, 2,500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரம், 1,000 ரூபாய் முதல், 1,200 ரூபாய் வரை விற்பனையானது.
முல்லை பூ கிலோ, 2,000 ரூபாய்க்கும், ஜாதி பூ, 1,500 ரூபாய்க்கும், ரோஜா, 200 ரூபாய்க்கும், சம்பங்கி, 250 ரூபாய்க்கும், செவ்வந்தி, 100 ரூபாய்க்கும், மரிக்கொழுந்து ஒரு கட்டு, 100 ரூபாய்க்கும், துளசி, நான்கு கட்டு, 60 ரூபாய்க்கும் விற்பனையானது.